Wednesday, August 10, 2011

அப்படித்தானிருக்கிறது...!

உச்சி வெய்யில்
தார்ச்சாலை
கானல் நீர்
தெரிந்தோ - தெரியாமலோ
அதிலொரு
பச்சிளங்குழந்தையின் பாதம்
அப்படித்தானிருக்கிறது
வாழ்க்கை தரும் ஒவ்வொரு அனுபவமும்.......!

Monday, August 8, 2011

என்றும் இணையா நதிக்கரைப்போல...!

இணைந்திருந்தேன்,
தாய், தந்தை மற்றும் சுற்றத்தோடு
விவரம் அறியா வயது வரை
பிரிய ஆரம்பித்தேன்,
விவரம் தெரிய ஆரம்பித்த வயதில்
முதன் முதல்
கல்விக்காக..!
பிறகு
வேலைக்காக / பிழைப்புக்காக..!
அடுத்து
மனைவி / மக்களுக்காக...!
கடைசியாக...,
இவர்களையும் பிரிந்தேன்
முன்னேற்றத்திற்காக ( என்ன முன்னேற்றமோ...!)...!
ஆக மொத்தம்,
என்றும் இணையா நதிக்கரை போலத்தான் போலிருக்கிறது
மனித வாழ்க்கையும்...!

Saturday, August 6, 2011

ஆட்சேபனையில்லை...!

ஆட்சேபனையில்லை,
மனம்
பிறழாமல் இருக்கும் போது
நம்மிடமிருந்து அடுத்தவர்களுக்கும்
அடுத்தவர்களிடமிருந்து நமக்கும் - கிடைக்காத
அன்பு, பாசம், கருணை, புரிதல் எல்லாம்
மனம்
பிறழும் போது தான் கிடைக்கும் என்றால்
ஆட்சேபனையில்லை
அப்படி இருப்பதில்...!

ஆசிர்வதிக்கப்பட்டவன்...!

உலகிலுள்ள
எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும்
சென்று கிடைக்காத நிம்மதி / சந்தோஷம்
உங்கள் குழந்தையின்
ஒரு கீற்று புன்னைகையில் கிடைக்கப்பெற்றால் / உணர முடிந்தால்
இவ்வுலகில் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நீ...!

Tuesday, July 5, 2011

அவ்வளவு உறுதியாக மறுக்க முடியாது...!

நான்
என்ன தான்
என் தாயை தெய்வமாக வணங்கினாலும்
சில (அல்ல) பல நேரங்களில்
மற்ற பெண்களும் ஒரு தாய் தான்
அல்லது
தாயாக போகிறவள் தான் என்பதை
மறந்து தான் போகிறேன் என்பதை - என்னால்
அவ்வளவு உறுதியாக மறுக்க முடியாது...!

Monday, July 4, 2011

தூண்டுதலால் - ஏதேதோ எழுதப்படுகிறேன்

நான்
ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன்
நாய் துரத்துமே யானால்...
அதேபோல் ,
கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன்
தூண்டப்படுவது தொடருமே யானால்....!


தனித்தன்மை...!

ஒரு ஆண்,
பெண் வேடம்
போடும் போதுதான் - தெரிகிறது
பெண்மையின் தனித்தன்மை
அந்த அழகு, நளினம், நெளிவு, சுளிவு, பாவம்...எல்லாம்...,