Monday, August 8, 2011

என்றும் இணையா நதிக்கரைப்போல...!

இணைந்திருந்தேன்,
தாய், தந்தை மற்றும் சுற்றத்தோடு
விவரம் அறியா வயது வரை
பிரிய ஆரம்பித்தேன்,
விவரம் தெரிய ஆரம்பித்த வயதில்
முதன் முதல்
கல்விக்காக..!
பிறகு
வேலைக்காக / பிழைப்புக்காக..!
அடுத்து
மனைவி / மக்களுக்காக...!
கடைசியாக...,
இவர்களையும் பிரிந்தேன்
முன்னேற்றத்திற்காக ( என்ன முன்னேற்றமோ...!)...!
ஆக மொத்தம்,
என்றும் இணையா நதிக்கரை போலத்தான் போலிருக்கிறது
மனித வாழ்க்கையும்...!

No comments:

Post a Comment