என்றோ ஒரு நாள்,
நீ பள்ளிக்கு புறப்படும்போது
செலவுக்கு வேண்டுமென கைவிட்டு
என் சட்டைப்பையிலிருந்து
இருபது ரூபாய் எடுத்தது - உண்மையிலே
அன்று தான்
உணர்ந்தேன் நானும் சம்பாதிக்கிறேன்
என்னிடமிருந்தும் பறிப்பதற்கு (விளையாட்டாக)
ஒரு ஜீவன் இருக்கிறது என்று...,
ஏனென்றால்,
துணையோடு பிறந்தாலும் - தனியாகவே
வளர்ந்து - வாழ்ந்து - உழண்டு
கொண்டிருந்த என் மனதுக்கு இதமாய் இருந்தது
ஆனால்,
அன்றிலிருந்து இன்றும்
என் சட்டைப்பை திறந்தே இருக்கிறது
எடுக்கத்தான் ஆளில்லை...
No comments:
Post a Comment