Monday, February 28, 2011

இருக்கும் ஒரு சாதனையின் தொடக்கம்.....

இன்று,
நான் தொடங்கும் ஒவ்வொரு பயணங்களும்
தோல்வியில் முடியலாம் - ஆனால்
நாளை எடுத்து வைக்கும்
ஒவ்வொரு காலடியின் முடிவுலும்
இருக்கும் ஒரு சாதனையின் தொடக்கம்.....

Sunday, February 27, 2011

என்னையும் அறியாமல்...!

எங்கேயாவது,
கணவன் - மனைவி இவர்களுக்கிடையில்
ஓர் குழந்தையை பார்க்க நேரிட்டால்
என்னையும் அறியாமல் - ஒரு சொட்டு கண்ணீர்
என் கண்களில்
காரணம்
நமக்கு இது பறிபோனதே என்ற ஆதங்கமா?
இல்லை
இவர்களுக்காவது நீடிக்கட்டும் என்ற வேண்டுதலா...?

Friday, February 25, 2011

உன் உதட்டோர மச்சம்...!

பிரம்மன்
தன் கையில் மீதமிருந்த
அழகை யெல்லாம் ஓருருண்டையாய்
உருட்டி வைத்த புள்ளி...

அப்படித்தாண்டி எனக்கும் உன் பிரிவு...!

நல்ல
பசியுள்ள ஒரு பச்சிலங்குழந்தை - தன்
தாயின் மார்பில் பால் குடித்துகொண்டிருக்கும்போது
திடீரென, அந்த தாய்
மாரடைப்பால் இறந்து போய் - பால்
சுரப்பது நின்று போனால்
எந்தளவுக்கு அந்த குழந்தையால்
அந்த நிலைமையை புரிந்துகொள்ளமுடியுமோ?
அப்படிதாண்டி,
எனக்கும் உன் பிரிவு...!

Thursday, February 24, 2011

நன்றாக நினைவிருக்குடி...!

என்றோ ஒரு நாள்,
நீ பள்ளிக்கு புறப்படும்போது
செலவுக்கு வேண்டுமென கைவிட்டு
என் சட்டைப்பையிலிருந்து
இருபது ரூபாய் எடுத்தது - உண்மையிலே
அன்று தான்
உணர்ந்தேன் நானும் சம்பாதிக்கிறேன்
என்னிடமிருந்தும் பறிப்பதற்கு (விளையாட்டாக)
ஒரு ஜீவன் இருக்கிறது என்று...,
ஏனென்றால்,
துணையோடு பிறந்தாலும் - தனியாகவே
வளர்ந்து - வாழ்ந்து - உழண்டு
கொண்டிருந்த என் மனதுக்கு இதமாய் இருந்தது
ஆனால்,
அன்றிலிருந்து இன்றும்
என் சட்டைப்பை திறந்தே இருக்கிறது
எடுக்கத்தான் ஆளில்லை...

Wednesday, February 23, 2011

யாரும் விதிவிலக்கல்ல

ஏறக்குறைய
எல்லா ஆண்களின் பார்வையும்
ஒரே மாதிரி தான் - முதன் முதலில்
ஒரு பெண்ணை பார்ப்பதில்
இதில்
யாராவது விதிவிலக்கா இருந்தால் உடனே
அவர்களெல்லாம் ராமனாக இருக்க முடியாது
ஒரு வேலை அவர்களுக்கு - எதிலும்
நாட்டம் இல்லாமல் இருக்கலாம்
குறிப்பாக அதில்....

Tuesday, February 22, 2011

புரிந்துணர்தல்...

என்னதான்
கட்டுப்பாடோடிருந்தாலும் -ஏதோ
ஒரு சில தருணங்களில்
அனைத்து நரம்புகளும் தூண்டப்பட்டு
நான் வெலியேற்றப்படுகிறேன்- அவன்
உள்ளே வருகிறான் - விளையாடுகிறான்
அது வெளியேருகிறது - மீண்டும்
நான் உள்ளே வருகிறேன்....