Saturday, March 19, 2011

யாருக்கு புலப்படும்...?

எவன் ஒருவனுக்கு,
சுவற்றில் அடித்த சுண்ணாம்பு
உதிர்ந்து ஆங்காங்கே குட்டி
தீவுகளைபோல இருப்பதில்
பல சித்திரங்களை/உருவங்களை
காண முடிகிறதோ/உருவாக்க முடிகிறதோ - அவனுக்கே
புலப்படும் இந்த வாழ்க்கை
ஏனென்றால், இந்த வாழ்க்கை
ஒரு கைதேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியம் அல்ல!
அது குழந்தையின் கிறுக்கல்கள்.......!