நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
நான், என்ன தான் என் தாயை - தெய்வமாக வணங்கினாலும் மற்ற பெண்களும் என் தாயை போல ஒரு தாய் தான் அல்லது தாயாக போகிறவள் தான் என்பதை - சில இல்ல பல சமயங்களில் மறந்து தான் போகிறேன்.....